திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ஊக்கம் தருவது ரசிகர்களின் பாராட்டு. அதுபோல அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். திறமையான கலைஞர்களைத் தேடிக் கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள்.
18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் மே 1 அன்று நடைபெற்றது.
நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது….
18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விசயம்.செல்வ
குமாரை எனக்குஇத்தனை பல வருடங்களாகத் தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்தவேண்டும்.
சினிமாவில் இருப்பதே பெருமையான விசயம். அத்தகைய சினிமாத்துறையின
ருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி என்றார்.
டாக்டர் சிஎம்கே ரெட்டி பேசியதாவது….
பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விசயம் கிடையாது.அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துகள். மருத்துவத் துறையும், சினிமாத்துறையும் சந்திக்கும் ஒரு பொது பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள் தான். சமூகத்தைக் கெடுக்கும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் விதமாகப் படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என்றார்.
இயக்குநர் விக்ரமன் பேசியதாவது….
எடிசன் விருதுகள் விழாவில் கலந்து கொள்வது பெருமையான தருணம்.என் மகன் சிறந்த அறிமுக நடிகருக்கான எடிசன் விருது வென்றான்.அடுத்து அவன் நடிக்கும் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான எடிசன் விருதுகளை வெல்லவேண்டும் என்பது என் விருப்பம். ஃபிலிம்ஃபேர் விருது,தேசிய விருது,தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் போல எடிசன் விருதும் பெருமைக்குரிய விருது.இந்த விருது விழா இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும் என்பது என் விருப்பம் என்றார்.
நடிகர் ஜெகன் பேசியதாவது….
எடிசன் விருதுவிழாவை மூன்று வருடங்கள் தொடர்ந்து தொகுத்து வழங்கியிருக்கிறேன்.பலருக்கும் இந்த விருது உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.
ராதாரவி சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.அதற்கு சிறந்த உதாரணம் அவர் நடித்த ‘சின்ன மாப்பிள்ளை’ என்ற திரைப்படம்.அம்பிகா மேமுக்கு நான் பெரிய ரசிகன்.அவரது எல்லாப் படங்களும் எனக்குப் பிடிக்கும். விக்ரமன் சாரின் படங்களும் எனக்குப் பிடிக்கும்.18 வருடங்களை N எட்டியிருக்கும் எடிசன் விருது விழாவுக்கு வாழ்த்துகள் என்றார்.
நடிகை அம்பிகா பேசியதாவது….
18 வருடங்களாக நடக்கும் இந்த விருது விழாவுக்கு வாழ்த்துகள்.
செல்வாவை எனக்கு பல வருடங்களாகத் தெரியும்.படப்பிடிப்பைபொறுத்து விருது விழாவுக்கு வருகிறேன் எனச் சொல்லியிருந்தேன்.
சரியான தருணமும் அமைந்தது.ராதாரவி அண்ணன் எனக்கு குடும்பம் போல.விழாவில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியதாவது….
நாங்கள் இன்று இவ்வளவு தூரம் வளர்ந்து நின்றாலும் சினிமாத்துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் இயக்குநர் தவிர வேறு யாரேனும் நமது பணியைப் பாராட்ட மாட்டார்களா? அங்கீகரிக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.அப்படியான திறமையானவர்களைகண்டுபிடித்து எடிசன் விருதுகள் கொடுப்பது மகிழ்ச்சியான விசயம்.என்னுடைய ‘சித்திரை செவ்வானம்’ படத்திற்கும் எடிசன் விருது வாங்கியிருப்பது மறக்கமுடியாத ஒன்று.ராதாரவி சார்,விக்ரமன் சார்,அம்பிகா மேம் போன்ற பல முன்னோடிகளால் தான் நாங்கள் இங்கிருக்கிறோம். விருது வென்றிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
பாடகர் அந்தோணிதாசன் பேசியதாவது….
இந்த விருதுவிழாவிற்கு என்னை அழைத்ததற்கு நன்றி.ஆரம்ப காலத்தில் நான் பாடியபோது சுற்றி இருந்தவர்களின் கைத்தட்டல் தான் எனக்கு பெரிய உற்சாகம் தந்தது.
திரைத்துறைக்கு வந்தபிறகு விருதுகள் தான் அந்த உற்சாகத்தைக் கொடுத்தது.என்னைப் போன்றவர்களை கெளரவிக்கும் எடிசன் விருது விழாவிற்கு எனது வணக்கங்கள் என்றார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாவது….
18 வருடங்களாக நடக்கும் விருது விழாவிற்காக உலகம் முழுவதும் உள்ளவர்களை ஒருங்கிணைப்பது சாதாரண விசயம் இல்லை. சித்தாந்த ரீதியாக ராதாரவி அண்ணனுடன் முரண்பட்டாலும் அவர் மிகவும் அன்பானவர்.என்னைபல இடங்களில் முன்னிறுத்திப் பேசியிருக்கிறார். திரைத்துறையில் பல நண்பர்கள் எனக்கு இருந்தாலும் என்னை அடையாளம் கண்டு பொதுவில் பாராட்டியவர் ராதாரவி அண்ணன் தான்.மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி,மழைநீர் சேகரிப்புத் திட்டம், லாட்டரி தடைச் சட்டம் இதெல்லாம் என்னுடைய சாதனைகள்.
அதெல்லாம் பேசுபொருளாக மாறவில்லை.
அதற்கான அங்கீகாரத்தை ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள்.
ஆனால்,அதன் மையக்கரு நான் தான்.இதை பொதுவில் சொல்லிப் பாராட்டியவர் ராதாரவி அண்ணன்,
தான். தமிழ்நாட்டில் வாழுகிற மக்களுக்காகவும்,உலகம் முழுவதும் வாழுகின்ற தமிழர்களுக்காகவும் தொடங்கப்பட்ட ஒரு அரசியல் பேரியக்கம் தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி.விருது வென்றவர்களுக்கும் விருதுவிழாவிற்கு வருகை தந்திருக்கும் ராதாரவி,விக்ரமன், அம்பிகா உள்ளிட்ட அனைவருக்கும் என் வணக்கங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.