47ஆண்டுகளுக்குப் பின் ரஜினி – கமல் இணையும் படத்தின் மற்றொரு நாயகன் யார்? என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாகி இருக்கிறது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் 47 ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘KHxRK’
இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை காணத் தயாராகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நாயகர்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் சிறப்பான திரை அனுபவமாக அமையும். இந்தப் படத்தில்b இன்னொரு நாயகனும் இணைகிறார் என்பது சிறப்புத் தகவல்.
1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த ரஜினி- கமல் இருவரும் தற்போது மீண்டும் இணைவது இந்திய திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய இரண்டு அபாரமான கலைப் பயணங்கள், இத்திரைப்படத்தின் மூலம் ஒன்றாக சங்கமிக்கின்றன.
இந்த மாபெரும் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த வரலாற்றுச் சந்திப்பை சாத்தியமாக்கியதில் பெருமை கொள்கின்ற தயாரிப்பு நிறுவனம், இந்தப் படத்தை அளவிலும், பாரம்பரியத்திலும், கதை சொல்லுதலிலும் உயர்ந்த தரத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“ரஜினிகாந்த் அவர்களையும் கமல்ஹாசன் அவர்களையும் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைப்பது எங்களுக்கெல்லாம் ஒரு கனவு நனவாகும் தருணம். இந்த வரலாற்று மற்றும் உணர்ச்சிமிகு தருணத்தை சாத்தியமாக்குவதில் எங்களுக்கு மிகுந்த பெருமையும் நன்றியும் உள்ளது. அவர்களின் அபாரமான பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் ஒரு வலுவான திரை அனுபவத்தை உருவாக்க எங்கள் முழு அர்ப்பணிப்புடன் இந்தப் பயணத்தை தொடங்குகிறோம்.”
இந்த திரைப்படத்தை ‘ஜெயிலர்’ வெற்றிப் படத்தை வழங்கிய புகழ்பெற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் இசையை இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாள
ரான அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார்.
படம் குறித்த
மேலும் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.