ஈழத்தில் தயாரான “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பித்திருப்பதாக படக்குழுவினர் அறியத்தருகின்றனர். அந்தோனி திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். இரமணன் இணை இயக்குனராக பணிபுரிகிறார். இணை தயாரிப்பாளர்களாக விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ்) ஆகியோர் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

கயல் திரைப்பட நடிகர் “கயல் வின்சன்ட்” அவர்களும், சினிமா உலகில் தனக்கென தனி இடத்தினை பிடித்து, மிக குறைந்த அளவில் சிறப்பான கதையம்சங்களை கொண்ட கதைகளை தெரிந்து நடித்து வரும் கயல் வின்சென்ட் நாயகனாக நடிக்கிறார். காதலிக்க நேரமில்லை, வாழ், போர், மாடர்ன் லவ், இமைகள் படங்களின் நாயகியான T.J.பானு, நடிகர் அருள்தாஸ், குணச்சித்திர நடிகர் நிழல்கள் ரவி, மற்றும் இலங்கையை சேர்ந்த நடிகர் சுதர்சன் ரவீந்திரன், மற்றும் நடிகை செளமி, ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்தன், இதயராஜ், யசிதரன், தர்ஷிபிரியா, ஷாமிலா, சாந்தா, சர்மிளா, வசந்த சீலன் படத்தின் பிரதான நட்சத்திரங்கள். ஒளிப்பதிவு ரிஷி செல்வம்.
இலங்கை மண் சார்ந்த கதைக்களம் கொண்ட இந்தத் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்
பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியிட்டு தேதியை அறிவிக்க இருக்கிறார்கள்.