ஃப் நோட் புரொடக்ஷனின் தயாரிப்பில், புகழ் பெற்ற இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பெரிய (தமிழ்–தெலுங்கு) இருமொழித் திரைப்படமான ‘Gods and Soldiers’ திரைப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழு அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளது. பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற பிறகு, படக்குழு தற்போது விரிவான Post-Production பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, வலுவான உணர்ச்சி மையத்தைத் தழுவி உருவாகும் Gods and Soldiers படம், கலாச்சார வேர்களோடு இணைந்த கதை சொல்லலையும், மக்களைக் கவரும் வணிக ரீதியான அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு திரை அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவை அனைத்தும் விஜய் மில்டனின் திரைப்பட பாணியின் அடையாளங்களாகும்.
இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். ஆரி அர்ஜுன் இதுவரை இல்லாத ஒரு காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் புதுமையான தோற்றத்தில் தோன்றுகிறார். ராஜ் தருண் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார்; பரத் வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அம்மு அபிராமி மற்றும் கிஷோர் நடிப்புத் திறனை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களால் படத்திற்கு ஆழம் சேர்க்கின்றனர்.
மேலும், இப்படத்தினை தனித்துவமாக உயர்த்தும் வகையில், சுயாதீன இசை உலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற வேடன் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார். தனது இயல்பான குரல், சமூக உணர்வு மிக்க பாடல்வரிகள், மற்றும் இளைஞர்களிடையேயான பெரிய ஆதரவைப் பெற்றுள்ள வேடனின் பங்களிப்பு, படத்தின் கதைக்கு தனித்துவமான கலாச்சார மற்றும் இசைச் சுவையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது படத்தின் சமகால இணைப்பை வலுப்படுத்துவதோடு, அதன் உணர்ச்சி ஆழத்தையும் உயர்த்துகிறது.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைப் பற்றி இயக்குநர் விஜய் மில்டன் கூறு கையில்,
நடிகர்–நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் நன்றி தெரிவித்தார். “இந்த படம் அனைவரிடமிருந்தும் மித மிஞ்சிய உடல் உழைப்பையும் நேர்மையையும் எதிர்பார்த்தது. ஆனால் நாம் அதன் எல்லைகளை தாண்டியிருக்கிறோம்; திரையில் பதிவான அந்த ஆற்றல் பார்வையாளர்களுடன் வலுவாக இணையும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது எடிட்டிங், பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு மற்றும் காட்சித் துல்லிய மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, தொழில்நுட்ப ரீதியாக செழுமையான மற்றும் முழுமையாக ரசிக்க வைக்கும் திரையரங்கு அனுபவத்தை வழங்க படக்குழு செயல்பட்டு வருகிறது.
ரஃப் நோட் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் Gods and Soldiers, அதிரடி ஆக்ஷன், எமோஷனல், மற்றும் சமூகத்துக்கு தேவையான கருப்பொருட்களின் வலுவான சங்கமமாக, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக ரசிகர்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
டீசர், இசை வெளியீடு மற்றும் படம் வெளியீடு தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.